தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக இரண்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணை தலைவர் ஜோதி தலைமையில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் 6750 அகவிலை படியுடன் வழங்கிட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ஈமக்கிரியை தொகை 25,000 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட இரண்டாம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மாநில பொது செயலாளர் மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


