நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 2025 ஆம் ஆண்டு களப்பணி மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நந்தன் கால்வாய் களப்பணியாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டம் 2025 ஆம் ஆண்டு களப்பணி மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப.,செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நந்தன் கால்வாய் பணிக்காக சிறப்பாக களப்பணி ஆற்றிய விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நந்தன் கால்வாய் புனரமைப்பு பணிக்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

