மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

விழுப்புரம் மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்காக அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன் பின் வண்ண மலர்கள் , தங்க கவச அலங்காரம் செய்து சர்க்கரை பொங்கல், சுண்டல் பல்வேறு வகையான பழங்களை கொண்டு நெய்வேத்தியமும் அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.
அதன்பின் நீண்ட நெடு வரிசையில் காத்துக் கொண்டிருந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
உற்சவர் அங்காளம்மன் அருள்மிகு மங்கல கௌரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாள் முழுவதும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்திருந்த நிலையில் இரவு பத்து முப்பது மணிக்கு மேல் பூசாரிகள் வழக்கப்படி உற்சவர் அங்காளம்மன் பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு பூசாரிகள் வழக்கப்படி தாலாட்டு பாடி தீபாரதனை எடுத்து ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த காற்றழுத்தாழ்வு காரணமாக இன்று காலை முதலே விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வந்த நிலையில் ஊஞ்ச உறிச்சவத்தின் போது தீவிரமாக கன மழை பெய்தது. அப்போது கொட்டும் மழையிலும் பக்தர்கள் தீபம் ஏந்தி வழிபாடு செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கூட்ட நெரிசலை தவிர்க்க தடுப்பணைகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் கோவில் உதவி ஆணையர் சக்திவேல் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை பூசாரி மற்றும் அறங்காவலர்கள் சுரேஷ்,மதியழகன் , பச்சையப்பன், சரவணன், வடிவேல், மற்றும் சந்தானம் பூசாரி, திருக்கோவில் மேலாளர் சதீஷ், காசாளர் மணி, மணியம் குமார், உள்ளிட்ட பூசாரிகள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஊஞ்சல் நடைபெறுவதற்கு முன்னதாக தமிழக காவல்துறை கூடுதல் இயக்குணர் டேவிட் சன் தேவாசிர்வாதம் சட்ட ஒழுங்கு, விழுப்புரம் இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் சிவலிங்கம், மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் உதவி ஆணையர் சக்திவேல் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலையுடன் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மேல்மலையனூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.


