in

5 வருடப் போராட்டங்களுக்கு பிறகு இலவச வீட்டு மனை பட்டா, இனிப்பு வழங்கிக் கொண்டாடிய திருநங்கைகள்.

5 வருடப் போராட்டங்களுக்கு பிறகு இலவச வீட்டு மனை பட்டா, இனிப்பு வழங்கிக் கொண்டாடிய திருநங்கைகள்.

 

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் 5 வருடப் போராட்டங்களுக்கு பிறகு இலவச வீட்டு மனை பட்டா வாங்கியதற்கு திருநங்கைகள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணலூர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் வாடகைக்கும் அல்லது போக்கியத்திற்கும் வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக தமிழக அரசிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் 9 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.

எனவே தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக திருநங்கைகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு இலவச தொகுப்பு வீடு அல்லது கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.

What do you think?

திமுக ஆட்சியில் நாள்தோறும் சீர்கெட்டு வரும் சட்டம் ஒழுங்கு

சொக்கநாதபுரம் 18ம் ஆண்டு ஸ்ரீ சத சண்டி மகா பிரத்யங்கிரா தேவி யாகம்