in

திருவண்ணாமலை மலையில தடை மீறி ஏறிய நடிகை! – வனத்துறையினர் விசாரணை


Watch – YouTube Click Shorts

திருவண்ணாமலை மலையில தடை மீறி ஏறிய நடிகை! – வனத்துறையினர் விசாரணை

திருவண்ணாமலைனாலே அந்த 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலைதான் ஸ்பெஷல்.

மலையைச் சுத்தி கிரிவலம் வர யாருக்கும் தடை இல்லை, ஆனா மலை மேல ஏறுறதுக்கு வனத்துறை கண்டிப்பான தடை விதிச்சிருக்காங்க. ஏன்னா அது வனத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்குற பகுதி.

சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் ஓரிரு நாளைக்கு முன்னாடி, வனத்துறையிடம் எந்த அனுமதியும் வாங்காம திருட்டுத்தனமா மலை உச்சி வரைக்கும் போயிருக்காங்க.

அங்க போய் எடுத்த போட்டோக்களை அவங்க இன்ஸ்டாகிராம்லயும் தட்டி விட்டிருக்காங்க. அவங்க அந்தப் பதிவுல என்ன சொல்லிருக்காங்கன்னா:

“மலை ஏறி இறங்குறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.” “திரும்பி வரும்போது இருட்டிடுச்சு, அதனால எனக்கு ரொம்ப பயமா போயிருச்சு.” “நீங்க மலை ஏற போறீங்கன்னா சீக்கிரமா ஆரம்பிங்க, சூரியன் மறையுறதுக்குள்ள கீழே வந்துடுங்க”ன்னு மத்தவங்களுக்கும் ஐடியா கொடுத்திருக்காங்க.

தடையை மீறி மலை ஏறுனது மட்டும் இல்லாம, மத்தவங்களையும் மலை ஏற தூண்டுற மாதிரி அவங்க பதிவு போட்டது இப்போ பெரிய சர்ச்சையாகிருக்கு.

“சட்டம் எல்லாருக்கும் பொதுவானது தானே? ஒரு செலிபிரிட்டி தடையை மீறலாமா?”ன்னு சமூக வலைதளங்கள்ல கேள்வி எழுப்பப்படுது. இந்த விஷயம் வனத்துறை காதுக்கு போன உடனே, அவங்க விசாரணையை ஆரம்பிச்சுட்டாங்க. அனுமதி இல்லாம பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள்ள போனதுக்காக அவங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லப்படுது.

What do you think?

தற்காலிகமாக போடப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக விடிய விடிய வெளியேறிய குடிநீர்

சிறை – என்ன ஒரு திரைப்படம்!