முகமூடி அணிந்து தியேட்டருக்கு வெளியே Review கேட்ட நடிகர்
தருண் மன்சுகானி இயக்கத்தில் அக்ஷய் குமார், நர்கிஸ் ஃபக்ரி, அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் சோனம் பஜ்வா ஆகியோர் நடித்த ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு தனது படத்திற்கான விமர்சனங்களை பார்வையாளர்களிடமிருந்து பெற மாஸ்க் அணிந்து சென்ற அக்ஷய் அற்புதமான அனுபவத்தைப் பெற்றதாக கூறினார்.
ஹவுஸ்ஃபுல் 5 விமர்சனங்களை நேரடியாக அறிய சமீபத்தில் தியேட்டருக்கு வெளியே எப்படி நின்றேன் என்பதை ரசிகர்களிடம் கூறும் வீடியோவை அக்ஷய் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“நான் கில்லர் மாஸ்க் அணிந்து பாந்த்ராவில் ஹவுஸ்ஃபுல் 5 தியேட்டர்’ ரிலிருந்து வெளியே வருபவர்களை நேர்காணல் செய்ய முடிவு செய்தேன்.
பக்தா ஜானே வாலா தா எண்ட் மே ஆனால் பாக் கயா அஸ் சே பெஹ்லே. மஸ்த் அனுபவம். நான் கிட்டத்தட்ட இறுதியில் சிக்கிக்கொண்டேன், ஆனால் அதற்கு முன்பே ஓடிவிட்டேன்.
வேடிக்கையான அனுபவம். முகமூடியுடன் சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்த அக்ஷய் தியேட்டரை விட்டு வெளியே வரும் மக்களிடம் படம் பிடித்திருக்கிறதா என்று அவர் கேட்கிறார்.
வீடியோவில், பலர் அவரையோ அல்லது அவரது குரலையோ அடையாளம் காணாவிட்டாலும், படம் பிடித்திருக்கிறது என்று கூறினர் இறுதியில், அவரை அடையாளம் கண்ட ஒரு பெண், புன்னகையுடன் அவரைப் புகை படம் எடுத்தார்.
ஹவுஸ்ஃபுல் படத்தின் ஐந்தாவது பாகம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தைக் கொண்டிருந்தது இந்தியாவில் ₹55 கோடியையும், இரண்டு நாட்களில் உலகளவில் ₹87 கோடியையும் வசூலித்தது.
ஹவுஸ்ஃபுல் 5, பார்க்கப்படும் தியேட்டரைப் பொறுத்து இரண்டு வெவ்வேறு கொலையாளிகளுடன் இரண்டு வெவ்வேறு கிளைமாக்ஸ்..சை கொண்டுள்ளது. இரண்டு கிளைமாக்ஸ் ..சுடன் முதன் முறையாக வெளிவந்திருக்கும் படம் ஹவுஸ்ஃபுல் 5.


