புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் கடலில் படகு சவாரி உயிரிழந்த சம்பவம்
பெங்களூருவை சேர்ந்தவர் விஜய் இவருடைய மனைவி சோனியா. இவர்களுக்கு சதீஷ், அஸ்வின், சதீஸ்வரி என்ற 3 குழந்தைகள் உள்ள நிலையில் விஜய் தனது உறவினர்கள் 8 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இதனிடையே இன்று வீராம்பட்டினம் கடல் பகுதியில் சதீஷ் என்பவரின் படகில் படகு சவாரி செய்தபோது திடீரென எழுந்த ராட்சச அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில், படகில் சவாரி செய்த 8 பேரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர்.
இதனை கண்ட மீனவர்கள் படகுகள் மூலம் கடலில் உயிருக்கு போராடியவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.இதில் சோனியா கடலில் மூழ்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோனியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மற்ற 7 பேரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் 5 பேருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் இது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் லைசன்ஸ் இல்லாமலும், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்காமல் படகு இயக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் அனுமதியின்றி நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா படகுகள் இயக்கப்படுவதாக தொடர்ந்து புகார் அளித்தும் அரசு நடவடிக்கை எடுக்காதது குறிப்பிடத்தக்கது.

