திருவலஞ்சுழியில் பிறந்த குழந்தை 3 மர்ம நபர்கள் வீட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் சுவாமிமலை காவல் நிலைய சரகம் திருவலஞ்சுழியில் உள்ள அருள்மிகு வெள்ளை பிள்ளையார் கோயிலின் வாசலில் நீல நிற இன்னோவா காரில் வந்த 3 நபர்கள் பிறந்த தொப்புள் கொடியுடன் உள்ள ஆண் குழந்தையை சிமெண்ட் சாக்கில் கோவிலின் வாசலில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
தகவலயறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுவாமிமலை காவல்துறையினர் குழந்தை மீட்டு கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
குழந்தை நலமாக உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


