திருவையாறில் அரசர் கல்லூரி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்.
திருவையாறு அரசர் கல்லூரியில் மகளிர் தின விழா கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் ரஜினி தேவி வரவேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நூலகர் மற்றும் மேனாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ரமேஷ், சமூகவியல் துறை துணைத்தலைவர் பொன்னிச்செல்வன், வணிகவரித்துறை தலைவர் ராஜமோகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தஞ்சை மாவட்ட தொழில்துறை மைய மாவட்ட வள அலுவலர் ராஜ மகேஸ்வரி, திருவையாறு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சத்தியபாமா, திருவியாறு காவல் நிலைய ஆய்வாளர் மீனா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது மாணவிகள் உற்சாகமாக விசில் அடித்து மகளிர் தினத்தை கொண்டாடினார்.


