அதிமுக சார்பில் செஞ்சியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்
வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தீவிர சுவர் விளம்பரமும் மற்றும் துண்டறிக்கும் போஸ்டர்களும் ஒட்டி தங்கள் வாக்குகளை சேகரிக்க தொடங்கியுள்ளனர்
அதன்படி பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்த இரண்டு கட்ட தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அறிவுறுத்தலின் பேரில் செஞ்சி பேரூர் கழக செயலாளர் சுந்தர்ராஜன் ஏற்பாட்டில் செஞ்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் நான்கு முனை சந்திப்பு,காந்தி பஜார்,செஞ்சி நகரங்களில் அதிமுக சார்பில் தற்பொழுது எடப்பாடி அறிவித்த தேர்தல் வாக்குறுதியை துண்டு பிரசுரங்கள் வியாபாரிகள் பொதுமக்களிடையே வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சியில்மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர், கு கண்ணன்,மாவட்ட எம் ஜி ஆர் மன்றம் இளைஞரணி செயலாளர் வி. ஆர்.பிருத்திவிராஜ்,செஞ்சி தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலவன்,அதிமுகநகர பொருளாளர் பாஸ்கர், அம்மா பேரவை சரவணன், நகர அம்மா பேரவை மணிமாறன்,நகர அம்மா பேரவை செயலாளர் திருமலை, அதிமுக மாவட்ட இளைஞரணி இணை செயலாளர்.
சுகுமார்,நகர வர்த்தக அணி பாலா,நகர தகவல் தொழில் நுட்ப அணி தினேஷ், அதிமுக தொழிற்சங்க ஜாகிர் உசேன், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் கார்த்திக், நகர எம்ஜிஆர் அணி பொருளாளர் விஜயன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு துண்டு பிரசவங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

