in

போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் அதிரடி கைது.. 


Watch – YouTube Click

சினிமா வட்டாரத்துல இப்போ ஒரு பயங்கரமான போதைப்பொருள் விவகாரம் வெடிச்சிருக்கு.

வளசரவாக்கம் ஏரியால நடந்த அதிரடி ரெய்டுல ஒரு சினிமா நடிகையும், துணை நடிகையும் சிக்கியிருக்கிறது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.

முதல்ல விக்னேஸ்வரன்னு ஒருத்தரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தட்டித்தூக்குனாங்க. அவர்கிட்ட இருந்து ‘மெத்தபெட்டமைன்’ (Methamphetamine) பறிமுதல் செய்யப்பட்டுச்சு.

அவர் கொடுத்த தகவலின் படி வெங்கடேஷ் குமார் சிக்கினாரு. இவங்க ரெண்டு பேரையும் வச்சு விசாரிச்சப்போ தான் சினிமா நடிகைகளுக்கும் இதுல தொடர்பு இருக்குறது தெரியவந்துச்சு.

கைது செய்யப்பட்டவங்க கொடுத்த வாக்குமூலத்தை வச்சு, போலீசார் ஒரு பெரிய பட்டாளத்தையே வளைச்சாங்க: நடிகை அஞ்சு கிருஷ்ணா (30): இவர் ஒரு படத்துல ஹீரோயினா நடிச்சிருக்காரு.

துணை நடிகை வின்சி @ நிவேதா (26): இவங்க பல படங்கள்ல சின்ன சின்ன ரோல் பண்ணிருக்காங்க. கார்த்திகா ராஜா, யஸ்வந்த், ஸ்ரீராம், ஆல்வின், தமிம் நிஸ்வான்னு ஒரு பெரிய கும்பலே கைதாகியிருக்கு.

இந்த கும்பல் பெங்களூருல இருந்து போதைப்பொருளைக் கடத்திட்டு வந்து இங்க வித்துருக்காங்க.

நடிகை அஞ்சு கிருஷ்ணா வீட்லயே தான் இவங்க ‘மெத்’ மற்றும் கஞ்சா புகைச்சு பார்ட்டி பண்ணிருக்காங்க.

மெத்தபெட்டமைன், கஞ்சா, அதை புகைக்கப் பயன்படுத்துற மெஷின்கள் மற்றும் அவங்ககிட்ட இருந்த விலை உயர்ந்த போன்கள் எல்லாத்தையும் போலீசார் பறிமுதல் செஞ்சுட்டாங்க.

சென்னை கமிஷனர் அருண், இந்த வேலையைச் செஞ்ச தனிப்படை போலீசாரைப் பாராட்டியிருக்காரு. இந்த விவகாரத்துல இன்னும் வேற எந்தெந்த சினிமா பிரபலங்களுக்குத் தொடர்பு இருக்குன்னு போலீசார் இப்போ தீவிரமா விசாரிச்சுட்டு வராங்க.


Watch – YouTube Click Shorts

What do you think?

‘புலி’ பட பிரச்சனைக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம்

ஜனநாயகன் படம் விரைவில் வெளிவரும் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி