in

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு ‘ஜனநாயகன்’ கடைசி யுத்தம்! பொங்கலுக்கு வருமா?


Watch – YouTube Click

சென்னையில நடந்த சட்டப் போராட்டத்துல ‘சென்சார் போர்டு’ மேல்முறையீடு பண்ணி தடையுத்தரவு வாங்கினதால, ஜனவரி 9-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகாம போயிடுச்சு.

ஆனா விடாப்பிடியா இருக்குற தயாரிப்பு நிறுவனம் KVN புரொடக்ஷன்ஸ், இப்போ உச்ச நீதிமன்றத்துல (Supreme Court) கதவைத் தட்டியிருக்காங்க.

பொங்கல் விடுமுறைக்குள்ள படத்தை எப்படியாவது தியேட்டருக்குக் கொண்டு வரணும்னு ‘ஜனநாயகன்’ டீம் இப்போ டெல்லியில முகாமிட்டு இருக்காங்க.

இந்த அவசர வழக்கு (ஜனவரி 13) விசாரணைக்கு வர வாய்ப்பு இருக்கு.

டெல்லி கோர்ட்ல நாளைக்கு என்ன நடக்குதுங்கிறதைப் பொறுத்துதான் எல்லாம் இருக்கு: ஒருவேளை உச்ச நீதிமன்றம் சென்சார் சான்றிதழ் கொடுக்க உத்தரவு போட்டா, மின்னல் வேகத்துல வேலைகள் நடந்து ஜனவரி 14 அல்லது 15 (பொங்கல் அன்னைக்கு) படம் ரிலீஸ் ஆகிடும்.

சென்சார் போர்டு சொல்ற வாதங்கள்ல நியாயம் இருக்குன்னு கோர்ட் நினைச்சா, படம் வர்றது இன்னும் பல வாரங்கள் தள்ளிப்போகும்.

ஒரு பக்கம் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் தியேட்டர்கள்ல ஜம்முனு ஓடிக்கிட்டு இருக்கு.

இன்னொரு பக்கம் தளபதி ரசிகர்கள் எல்லாரும் டெல்லியில இருந்து வர்ற அந்த ஒரு “நல்ல செய்தி”க்காகத் தவம் இருக்காங்க.

What do you think?

புதுச்சேரி பிரான்ஸ் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த வெளிநாட்டவர் பங்கேற்ற பொங்கல் விழா பள்ளி குழந்தைகளுடன் நடனமாடி பொங்கல் வைத்து மகிழ்ச்சி 

சுதா கொங்கரா இயக்கத்துல வெளியான ‘பராசக்தி’ படத்துக்கு மிக்ஸட் ரிவியூஸ்