சோம வாரத்தை முன்னிட்டு வண்ண மலர்கள் அலங்காரம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி உடனுறை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் கார்த்திகை ஐந்தாவது சோம வாரத்தை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் பக்தர்களுக்கு ரம்யமாக காட்சி அளித்தனர்
.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை கும்ப தீபம் பஞ்சமுகத்தின் தீபாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வலம் வந்த ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு இரவு வீதி உலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


