in

அச்சக நகரான சிவகாசிக்கு தஞ்சையில் இருந்து பயணமாகும் காலண்டர்கள்

அச்சக நகரான சிவகாசிக்கு தஞ்சையில் இருந்து பயணமாகும் காலண்டர்கள்

 

இந்திய அளவில் அதிக அளவில் காலண்டர்கள் அச்சிடும் நகரங்களில் ஒன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஆகும் அங்கு தான் அச்சகங்கள் அதிக அளவில் உள்ளன.

பல்வேறு நவீன டிசைன்களிலும் காலண்டர்கள் அச்சிடப்பட்டு வருகின்றன, நாட்காட்டி, மாத காலண்டர் என பல வண்ணங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன, அங்குள்ள அச்சகங்களுக்கு தேவையான காலண்டர்களை வடிவமைப்பதற்கு ஏராளமான வரை கலை நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.

அவர்களில் முன்னணியில் இருப்பதுடன் தனிச்சிறப்புடன் தயார் செய்து கொடுப்பவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அதம்பை ராமமூர்த்தி ஆவார், இவருடைய சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதம்பை கிராமமாகும், தஞ்சையில் முல்லை பாரதி பிரிண்டர்ஸ் நடத்தி வரும் இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ஒடிசா, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் சமஸ்கிருதத்தில் தேவநாகரி எழுத்து வடிவத்திலும் கிரந்த எழுத்து வடிவத்திலும் படிப்பது, எழுதுவதுடன் கணிப்பொறியில் அச்சிடும் ஆற்றல் பெற்றவர்.

சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற அச்சகங்களுக்கு 15 ஆண்டுகளாக இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி 5 குஜராத்தி,பஞ்சாபி, ஒடிசா, பெங்காலி, அசாமி ஆகிய 10 மொழிகளில் மாதாந்திர காலண்டர்களை வடிவமைத்து தருகிறார்.

இவருடைய சிறப்பான பிறமொழி வடிவமைப்பு காரணமாக ஆண்டு தோறும் சிவகாசியிலிருந்து தொடர்ந்து இந்திய மொழிகளில் அச்சிடும் பணிகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதன் மூலம் இவர் வடிவமைத்த காலண்டர்கள் இந்தியா முழுவதும் செல்கிறது, இது குறித்து ராமமூர்த்தி கூறுகையில், எம் ஏ ஆங்கிலம் மொழி பெயர்ப்பியலுடன் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் டிப்ளமோ படித்துள்ளேன், மற்ற மொழிகளை நான் நன்கு கற்றுக்கொண்டு எழுதி வருகிறேன், தமிழ் . ஆங்கில காலண்டர்கள் மட்டும் நான் இதுவரை வடிவமைக்கவில்லை, அதற்கு அதிக எண்ணிக்கையில் வரை கலையில் ஈடுபடுவோர் இருப்பதால் பிற மொழி காலண்டரை வடிவமைப்பை செய்து வருகிறேன்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளில் இதுவரை பல்வேறு நூல்களையும் அச்சிட்டுள்ளேன், பல்வேறு மொழிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவி வருகிறேன், மலேசியா சிங்கப்பூர் நாடுகளுக்கும் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கி உள்ளேன், தமிழக கல்வெட்டில் உள்ள கிரந்த எழுத்து வடிவத்தை நேரடியாக தட்டச்சு செய்து அச்சிட்டு வருகிறேன், கிரந்த எழுத்து வடிவத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகளும் பழைய நூல்களில் உள்ளன,

அவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன், 10 மொழிகளில் காலண்டர் வடிவமைத்து தந்தாலும் தாய்மொழி தமிழில் இதுவரை காலண்டர் அச்சிட வாய்ப்பு வந்ததில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது,

மேலும் தனது நிறுவனத்தை முல்லை பாரதி என்று தமிழ் பெயர் கொண்டு நடத்தி வருகிறேன், தஞ்சையில் 25 ஆண்டுகளாக அச்சகப் பணியில் ஈடுபட்டாலும் கடந்த 10 ஆண்டுகளாக 10 மொழிகளில் காலண்டர் வடிவமைத்து வருகிறேன் என்று பெருமை பட கூறினார்.

What do you think?

ஜனநாயகன் படத்தை வாங்க தயங்கும் விநியோகஸ்தர்கள்

சாலையில் 100 மீட்டர் தூரம் பள்ளம் தோண்டிய தனிநபர்