திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர முன்னாள் அமைச்சரும் நடிகையும் ஆன ரோஜா மற்றும் முன்னணி நடிகை ரவளி சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் சுவாமியை தரிசனம் செய்த அவர்களுக்கு தரிசனத்துக்கு பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி மரியாதையை செய்தனர்.
தொடர்ந்து ஆலயத்துக்கு வெளியே பலரும் ரோஜாவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


