in

மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழாவினை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழாவினை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

 

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழாவினை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை பெரியக் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இக்கோவில் கட்டிட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி உலகப் புகழ் பெற்று வருகிறது, இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று மாவட்ட நிர்வாகம், மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040 ஆம் ஆண்டு சதய விழா வரும் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

இதனையடுத்து இன்று தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, நாதஸ்வர மேளம், தாளம் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட, பந்தல்காலுக்கு திரவிய பொடி, பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாரதனை காட்டப்பட்டது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, சதய விழாக் குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உள்ளிட்ட கோவில் அலுவலர்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை பெரியக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் இராஜராஜ சோழன் சதய விழா வெகு சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

திருமலையில் வெளுத்து வாங்கும் கனமழை

கொட்டும் மழையில் 10 டன் தீபாவளி குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள்