நாமக்கல் சேந்தமங்கலத்தில் கருட பஞ்சமி விழா
நாமக்கல் சேந்தமங்கலத்தில் கருட பஞ்சமி விழா -திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்!
கருட பஞ்சமி விழாவை ஒட்டி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் இலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்பு பால் குடம் அபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கருட பஞ்சமி விழா குழு தலைவி ஜெயசித்ரா தலைமை தாங்கினார்,
சேந்தமங்கலம் முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் எடுத்து வந்தவர்கள் பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு பால் அபிஷேகம் செய்து தீப ஆராதனை காட்டப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட பெண்களுக்கு தாலி பாக்கியம் கிடைக்கவும், ஆயுள் நீடிக்கவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சேந்தமங்கலம் ஸ்ரீகருடாத்ரி பக்த குழுவினர் செய்து இருந்தனர்.


