பிரத்தியங்கரா தேவிக்கு ஆவணி மாத அமாவாசை நிகும்பலாயாகம்
திண்டிவனம் அடுத்த பெரிய தச்சூர் அன்னபூரணி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலய வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாக மும் அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரிய தச்சூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னபூரணி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலய வளாகத்தில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
யாக குண்டத்தில் மிளகாய், பழங்கள், மூலிகைப் பொருட்கள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டது. தொடர்ந்து உற்சவமூர்த்தி கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், யாகசாலையில் வைக்கப்பட்ட கலச நீர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் செவ்வாடையில் ரோஜா மலர் மற்றும் வாழைப்பூ மாலையுடன் பிரித்திங்கரா தேவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவில் வளாகத்தில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


