கிருஷ்ண ஜெயந்தி உறியடி வைபவம்
திண்டிவனம் பூதேரி ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி வைபவம்.
.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பூதேரி ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மூலவர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் வண்ணமலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

மேலும் உற்சவர்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் அலங்கரிக்கப்பட்டு கிராமத்தின் பல இடங்களில் உரியடி வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் திரளான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


