நடிகை கல்பிகா..வின் மீது அவரது தந்தை போலீசில் புகார்
தெலுகு நடிகை கல்பிகாவுக்கு நாசீசிஸ்டிக் என்ற மனஅழுத்த கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு, பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அவரது குடும்பத்தினர் கூறினார்.
ஜூலை மாதம் கவுலிடோடியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவர் கூடுதல் சிகிச்சை பெற்றார், கல்பிகா பொதுமக்களுக்கு தொந்தரவாக மாறிவிட்டதாக அவரது தந்தை கணேஷ் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தனது மனுவை ஏற்று, மனநல சுகாதாரச் சட்டத்தின் கீழ் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க காவல்துறையை வலியுறுத்தினார்.
நடிகை கடந்த வாரம், அப்பகுதியில் உள்ள ஒரு பப்பில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, கச்சிபவுலி காவல்துறையினரால் கல்பிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மோகிலாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஒரு ஊழியரிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.


