இரட்டணை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா
இரட்டணை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா ஏழாம் நாள் அரங்கேற்றமும் அம்மன் பிறப்பும் நிகழ்வு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அத்தி வசந்த விழாவில் ஏழாம் ஏழாம் நாள் மூலவர் ஸ்ரீ திரௌபதி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ பஞ்சபாண்டவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு வீதி உலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


