காந்தி கண்ணாடி படத்தில் கிடைத்த சம்பளத்தில் பாலா என்ன செய்திருக்கிறார் பாருங்கள்
விஜய் டிவி ரியாலிட்டி ஷோ மூலம் என்ட்ரி கொடுத்த கே பி ஒய் பாலா தற்பொழுது காந்தி கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் வெளியாக இருக்கும் இவரின் படம் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான கே பி ஒய் பாலா சம்பாதிக்கும் பணத்தை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்து உதவி செய்வார்.
கஷ்டம் என்ற சொல்ல கேட்டவுடனேயே ஓடி சென்று உதவும் மனம் கொண்டவர். இவர் செய்த உதவிகளை சொல்ல ஆரம்பித்தால் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும் அந்த அளவிற்கு அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்.
தற்பொழுது ஹீரோ..வாகி விட்ட நிலையிலும் உதவும் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை காந்தி கண்ணாடி படத்தில் கிடைத்த சம்பளத்தை இரண்டு ஏழை குடும்பத்திற்கு வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார் பாலா.
ஹீரோ ஆனாலும் பாலா மாறவில்லை என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.


