பிரபல நடிகர் நடிகைகள் சிக்கும் அபாயம்
நடிகர் கிருஷ்ணாவின் Whatsapp குரூப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ் அடிபடையில் கைது செய்யப்பட்டு விசாரித்த நிலையில் அவருக்கும் போதை பொருள் விற்பனை செய்யும் பிரதீப் குமார் மற்றும் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஜான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவர் போதை பொருட்களை நடிகர் நடிகைகளுக்கு விற்பனை செய்துள்ளார்.
இவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பிரபல இசை அமைப்பாளர் மற்றும் மூன்றெழுத்து கொண்ட நடிகை மற்றும் நான்கு எழுத்து கொண்ட மற்றொரு இசையமைப்பாளர் ஒருவரும் இவருடன் தொடர்பில் இருப்பதால் அவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஸ்ரீகாந்த்திற்கு கொடுக்கப்பட்டது போல் நடிகர் கிருஷ்ணாவிற்கு முதல் வகுப்பு சிறை கொடுக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் கிருஷ்ணாவை பார்க்க முடியுமா என்று சிறை அதிகாரியிடம் ஸ்ரீகாந்த் கேட்டதற்கு முடியாது என்று மறுத்து விட்டனர்.
நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு தூக்கம் வராததால் அங்குள்ள நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை விரும்பி படிக்கிறாராம்.


