in

சொந்த மகளை கொலை செய்து விட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த  தந்தை.

சொந்த மகளை கொலை செய்து விட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த  தந்தை.

 

சிதம்பரம் அருகே பட்டதாரி பெண்ணை கோவில் பின்புறம் உள்ள வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த  தந்தை போலீசார் தீவிர விசாரணை.

சிதம்பரம் அருகே புத்தூர் காவல் நிலையம் மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட T.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் கூலி தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் அபிதா என்ற பட்டதாரி பெண் உள்ள நிலையில், பெண்ணிற்கு வேறு ஒரு ஆண் நண்பருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு தந்தை அர்ஜுனன் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து அந்த இளைஞருடன் அபிதா பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அபிதாவிற்கு பல்வேறு வரன்கள் பார்த்து வந்த நிலையில் அபிதா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் இன்று காலையில் மீண்டும் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அர்ஜுனன் அபிதாவை அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு அருகில் இருந்த பாத்திரத்தில் கையை கழுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று, தற்போது காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் அர்ஜுனன் சரணடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரணைக்கு பிறகு கொலைக்கான சம்பவம் குறித்து முழு பின்னணியும் தெரியவரும்.

What do you think?

அணிலாடி தூய இருதய ஆண்டவர் ஆலய 133-வது ஆண்டுப் பெருவிழா தேர் பவனி

தரிசு நிலங்களாக காணப்படும் விளைநிலங்கள்