அம்மனுக்கே வாக்காளர் அட்டை அடித்த இளைஞர்கள்
கொடைரோடு அருகே காளியம்மன்,பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவில், அம்மனுக்கே வாக்காளர் அட்டை அடித்து அட்ராசிட்டி செய்த இளைஞர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பொம்மனம்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு காளியம்மன் மற்றும் பகவதி அம்மன் வைகாசி உற்சவ விழா நடைபெற்று வருகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாளான நேற்று அம்மன் பூங்கரகம் ஜோடித்து தாரைதப்பட்டை வானவேடிக்கைகள் முழுங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது, அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம்,அக்னிசட்டி பொங்கள் வைத்து கிடாவெட்டி நேற்றிக் கடன் செலுத்தினர், விழாவில் ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் விநாயகர் முதல் முத்தாலம்மன், காளியம்மன், கன்னிமார், நாகம்மாள் என அணைத்து தெய்வங்களுக்கும் பிறந்த தேதி, வருடம், தொகுதி என வாக்காளர் அடையாள அட்டை போன்று கிராம இளைஞர்கள் சார்பில் அம்மனுக்கே வாக்காளர் அடையாள அட்டை அடித்து வித்தியாசமாக அதனை பேனராக வைத்தது அனைவரையும் ஈத்தது.

மேலும் இந்த விழாவில் திண்டுக்கல் மதுரை கோவை நெல்லை சென்னை பெங்களூர் பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்…


