மரக்காணம் அருகே கந்தாடுசெல்லியம்மன் கோயில் திருவிழா 300 பெண்கள் பால்குட அபிஷேகம்
மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில். இக்கோயில் ஆடி மாத 9 ஆம் ஆண்டு திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கந்தாடு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து சுவாமி ஊர்வலத்துடன் மேலதால இன்னிசை வாத்தியங்களுடன் 300 இக்கு மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தினர்.
இதுல தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கந்தாடு, மரக்காணம், ஆலத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.


