வீடூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா
வீடூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் ஆறாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வீடூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் ஆறாம் நாளை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்களால் சீர்வரிசை மற்றும் தாம்பல பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட அர்ஜுன் மகாராஜா மற்றும் ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு பஞ்சமுகத்திபாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வலம் வந்து முத்து பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து இரவு வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆறாம் நாள் நாள் திருவிழா உபயதாரர்கள் செய்து இருந்தனர்.