in

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் சித்திரை பெருவிழா பெருமாள் தங்க அனுமந்த பவனி

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் சித்திரை பெருவிழா பெருமாள் தங்க அனுமந்த பவனி

 

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் சித்திரை பெருவிழா பெருமாள் தங்க அனுமந்த பவனி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் 95வது தலமான அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் ஆடிப்பூர பெருவிழாவை முன்னிட்டு மூன்றாம் திருநாளில் பெருமாள் சிறிய திருவடியான தங்க அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் மூன்றாம் திருநாளில் உற்சவர் சௌமிய நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்தில் தங்க அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பல்வேறு சேவைகளும் துளசியால் அர்ச்சனைகளும் நடைபெற்றன. பின்னர் மங்கள வாத்தியங்களுடன் நான்கு ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வானவெடிகளுடன் மின்னொழியில் பவனி வந்த சுவாமிக்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

What do you think?

ஒலக்கூர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய 4-ம் ஆண்டு பிரம்மோற்சவ தேர் திருவிழா

தேவகோட்டையில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா  திருக்கல்யாணம் வைபவம்