புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு பெருவிழா முத்துமணிச் சிவிகை
தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு பெருவிழா, அலங்கார முத்துமணிச் சிவிகையில் சுவாமி புறப்பாடு.
நாதஸ்வர மேளதாளம், தப்பாட்டம், வாண வேடிக்கைகளுடன் கொட்டும் மழையிலும் இரவு முழுவதும் விடிய விடிய வீதி உலா, ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது, இக்கோவிலில் உள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது, அதனால் அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது, மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முத்துப் பல்லக்கு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து நேற்று இரவு அம்மனுக்கு முத்துமணிச் சிவிகையில் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்aப்பட்ட பிரமாண்ட பல்லக்கில் உற்சவ அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனைத் தொடர்ந்து நாதஸ்வர இசைக் கச்சேரிகள் இசைக்க, ஆண்கள் பெண்கள் தப்பாட்டம் மற்றும் வான வேடிக்கைகளுடன் இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய வீதி உலா நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


