in

துர்க்கை அம்மனுக்கு வெள்ளிகிழமை ராகு கால சிறப்பு அலங்கார ஆராதனை

துர்க்கை அம்மனுக்கு வெள்ளிகிழமை ராகு கால சிறப்பு அலங்கார ஆராதனை

 

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவிலில் துர்க்கை அம்மனுக்கு வெள்ளிகிழமை ராகு காலத்தை முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் ஏராளமான பக்தர்கள் வழிபாடு.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சசிவர்ணேஸ்வரர் திருக்கோவிலில் துர்க்கை அம்மனுக்கு வெள்ளி கிழமை ராகு காலத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.

இத்திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு துன்பம் தீர்க்கும் அம்மனாக துர்க்கை அம்மன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறார்.

அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து எலுமிச்சை மாலை அரளி பூ மாலை மற்றும் மலர் மாலைகள் சிறப்பு அலங்காரம் தொடர்ந்து அம்மனுக்கு பாசிப்பருப்பு கொண்டு தயாரித்த இனிப்பு பாயாசத்தை நெய்வேதியும் செய்து கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் மற்றும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர் பக்தர்களுக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

What do you think?

சேகரம் தூய திரித்துவ பேராலயத்தின் 200 வது ஆண்டு விழா

ஆஷாட நவராத்திரி வராகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்