சிவகங்கை ஸ்ரீ அன்னை வீரமாகாளி அம்மன் கோவில் பூச்சொரிதல் சிறப்பு அபிஷேக ஆராதனை
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ அன்னை வீரமாகாளி அம்மன் கோவில் பூச்சொரிதல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அன்னை வீரமாகாளி அம்மன் திருக்கோவிலில் 71 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
முன்னதாக மூலவர் வீரமாகாளி அம்மனுக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் பழச்சாறு சந்தனம் பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.
நிறைவாக அம்மனுக்கு சந்தன காப்பு சாற்றி சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீரமாகாளி அம்மனை வழிபட்டனர்.

