கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ் படத்தை பார்த்து பிரேமலதா விஜயகாந்த் கதறி அழுதார்….
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 1979-ம் ஆண்டு வெளியான ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100-வது படமாகும். .
இந்த படத்தில் மன்சூர் அலி கான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘கேப்டன் பிரபாகரன்’ மீண்டும் இன்று Rerelease செய்யப்பட்டது.
கேப்டன் பிரபாகரன்’ படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் முதல் காட்சியை கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள திரையரங்கில் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே. சுதீஷ் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தனர்.
பேண்ட் வாத்தியங்கள் முழங்க திரையரங்குக்குள் அவர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில் விஜயகாந்த் சண்டைக் காட்சியில் தோன்றிய போது பிரேமலதா விஜயகாந்த் கதறி அழ துவங்கினார். .
அப்போது அவரை விஜய பிரபாகரன் மற்றும் சுதீஷ் ஆகியோர் தேற்ற தொண்டர்களும் அழ வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
34 ஆண்டுகளுக்குப் பிறகு 4K தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் வெளியாகி உள்ள கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


