நெய்வேலி தேசிய மின்சக்தி பயிற்சி தொடக்க விழா
நெய்வேலி தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த ஓர் ஆண்டு முதுநிலை பட்டயப் பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில், முன்னதாக தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன மையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.
தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன மேலாண் இயக்குநர் முனைவர் தீப்தாகுமார் நிலக்கரி நிறுவன சுரங்க மனிதவள இயக்குநர் சமீர் சுவரப், மின் பிரிவு இயக்குநர் எம். வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில் ஓராண்டு காலம் நடைபெற உள்ள இப்பயிற்சியில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்தவர்களின் வாரிசுதாரர்கள் வேலை தேடுநர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற உள்ளனர் என தெரிவித்தார்.


