நாமக்கல் ராஜா சுவாமி ஆலய மஹா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த நன்செய் இடையாரு ராஜா சுவாமி ஆலய மாசிமாத மகா சிவராத்திரி பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
முன்னதாக சிவாச்சாரியர்கள் கொடியினை கைகளில் சுமந்தவாறு திருக்கோவிலை சுற்றி வந்து கோவில் முன் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் அரோகரா கோசத்துடன் ஏற்றப்பட்டது பின்கொடிக்கம்பத்திற்கு தர்ப்பை, மாவிலை, பட்டு வஸ்திரம் கட்டப்பட்டு பின்னர் கோபுர தீபம் உட்படபல்வேறு தீப உபசரிப்புகளுடன் மஹா தீபம் காண்பிக்கப்பட்டன.
பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு தீப தூப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டதுஇதில் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டனர்.


