திமுக அரசாங்கமே வெற்று காகிதம் நயினார் நாகேந்திரன் பேட்டி
திமுக அரசாங்கமே வெற்று காகிதம் தான். வெள்ளை அறிக்கை கேட்டதற்கு வெற்றி பேப்பரை அமைச்சர் ராஜா காட்டுகிறார்.ஆட்சியில் ஜனநாயகமே இல்லை.திமுகவை நம்பி காங்கிரஸ் கட்சி இருந்தால் இதைவிட மோசமான நிலைக்கு போகும் திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.
திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கேசவ விநாயகம் பொன் ராதாகிருஷ்ணன் பொன் பாலகணபதி உள்ளிட்டோருடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார் சுமார் இரண்டு மணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது.டெல்லி சென்று வந்தது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தது டிடிவி தினகரனின் பத்திரிகையாளர் சந்திப்புகள்,சிவி சண்முகத்துடனான சந்திப்பு ஆகியவை குறித்து முக்கிய தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.
தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாத சூழலே உள்ளது மாநிலத்தில் கல்வியில் பின்தங்கியே உள்ளது பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டு அரசு சுய விளம்பரம் செய்துள்ளது.பள்ளிக்கல்வித்துறையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளது இதனை அரசு நிரப்ப வில்லை வார்த்தைகளில் தான் அரசு சிறப்பாக செயல்படுவதாக கூறுகிறது நடைமுறையில் அது போன்ற நிலை இல்லை. அரசின் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் நடிகர்கள் இயக்குனர்கள் கலந்து கொண்டுள்ளனர் பெரும்பாலான நடிகர்கள் எந்த கட்சியும் சேர்ந்தவர்களாக இல்லை சிலர் அந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் ஆனால் பொதுவாக அரசு இதன் மூலம் விளம்பரத்தை தேடுகிறது.
காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள் அவர்களால் ஆட்சி அமைக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை.அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகத்தை சந்தித்ததில் வியப்பு ஏதும் இல்லை.சென்னையிலிருந்து திருச்சி வரும் வழியில் அவர் வீட்டில் இருப்பதாக அறிந்து நேரில் சென்று சந்தித்தேன் இது சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்கலாம். விடியாத அரசு போன்று கூட்டணி குறித்து உங்களது கேள்விகள் கூட்டணி பற்றி தொடர்கிறது இவை அனைத்திற்கும் டிசம்பர் மாதத்திற்குள் பதில் கிடைத்து விடும். கூட்டணியை வைத்து மட்டும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் ஆனால் கூட்டணி அவசியம் 2001 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்தது ஆனால் அதிமுக வே வென்றது இதே போல 1980 தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். வரும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து தொடங்குகிறோம். தொடர்ந்து மதுரையிலிருந்து யாத்திரை நடைபெறுகிறது அதில் பாஜக தேசியத் தலைவர் நட்டா கலந்து கொள்கிறார்..
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 1977 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக இருந்து வந்துள்ளார் நல்ல அனுபவம் வாய்ந்தவர்.திமுக அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்துவிட்டனர் பணம் கொடுத்தாலும் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். கூட்டணி மாறலாம் என கடம்பூர் ராஜு பேசவில்லை மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று அவர் பேசினார். அவரவர்களுக்கு அவரவர்கள் மதம் பெரியது டேவிட்சன் தேவா சீர்வாதம் தான் சட்டம் ஒழுங்கை கெடுத்து வருகிறார் மது கஞ்சா போன்ற போதை பழக்கங்கள் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.ஒரு சார்பு அரசாங்கம் ஆகவே தமிழக அரசு செயல்படுகிறது ஓட்டு வங்கிக்கான அரசாங்கமாக தமிழக அரசு செயல்படுகிறது விரைவில் இந்த அரசு வீழ்ந்து விடும். நிரந்தர பணி வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் மாறிவிட்டது ஏமாற்றி ஓட்டு வாங்கிய அரசாக இந்த அரசு உள்ளது. திமுகவை நம்பி காங்கிரஸ் கட்சி இருந்தால் இதைவிட மோசமான நிலைக்கு தள்ளப்படும். காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரை திமுக தங்கள் கட்சிக்கு இழுத்து வருகிறது.
வெளிநாட்டு முதலீடு குறித்த வெள்ளை அறிக்கை நானும் பலமுறை கேட்டு வந்திருக்கிறேன் வெள்ளை அறிக்கை கேள்வி எழுப்பினால் டிஆர்பி ராஜா வெறும் வெற்று காகிதத்தை காட்டுகிறார். இது ஜனநாயகமற்ற செயல் இந்த அரசாங்கமே வெற்று காகிதம் தான் என்று தெரிவித்தார்.
பேத்தியின் போது தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் ஐயா சாமி திருநெல்வேலி மாவட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.


