கம்பத்தில் பால் வியாபாரி மர்ம நபர்களால் படுகொலை
தேனி மாவட்டம் கம்பத்தில் பால் வியாபாரி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை – குற்றவாளிகள் தப்பி ஓட்டம் – காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள ஜல்லிகட்டு தெருவை சேர்ந்த முருகன் என்பவர் மகன் இளம்பருதி (வயது 27) பால் வியபாரியான இவர் ரேக்ளா ரேஸ்க்கு பயன்படுத்தும் ஜோடி மாடுகளை வளர்த்து வருகிறார்.
இரவு மணிகட்டி ஆலமரம் சாலையில் டீ கடையில் அவர் டீ குடிக்க சென்று விட்டு வெளியே வந்த போது மர்ம நபர்கள் அரிவாள், பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக அவரை வெட்டியுள்ளனர்.
அதனைப் பார்த்த அருகில் இருந்த ஊத்துக்காடு பிரிவு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த கும்பல் தடுக்க முயன்ற ஈஸ்வரனையும் வெட்டியுள்ளனர்.
காயமடைந்த இளம்பரிதி மற்றும் ஈஸ்வரனை உடனடியாக அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் மீட்டி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது இளம்பருதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த ஈஸ்வரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ரேக்ளா ரேஸ் முன் விரோதம் காரணமாக இளம்பரிதி வெட்டி படு கொலை செய்பட்டிக்கலாம் என கிடைத்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
இதனை அடுத்து இறந்த இளம்பருதியை பிரேசு பரிசோதனைக்காக காவல்துறையினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.
இதனை அறிந்த இளம் பருதியின் உறவினர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் இளம்பருதியின் உடலை வேறு எங்கும் கொண்டு செல்லக்கூடாது என கூறி திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலில் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனை அடுத்து இளம் பருதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கம்பம் வடக்கு காவல் துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தச்சம்பவம் கம்பம் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.


