மஹாவாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி விழா.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு 23ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இவ்விழாவின் முதல் நாளான இன்று அம்மனுக்கு ஜாங்கிரி மைசூர் பாகு , லட்டு, சந்திரகலா உள்ளிட்ட பல வகையான இனிப்புகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் மஹாகணபதி ஹோமத்துடன் சிறப்பாக இன்று தொடங்கியது. 10நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் இனிப்பு அலங்காரம், குங்கும அலங்காரம், மஞ்சள் அலங்காரம்,சந்தன அலங்காரம்,மாதுளை அலங்காரம் என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
முதல் நாள் இன்று தொடங்கிய ஆஷாட நவராத்திரி விழாவில் மஹாவாராகி அம்மனுக்கு லட்டு, ஜாங்கிரி, மைசூர் பாக், சந்திரகலா உள்ளிட்ட பல் வகையான இனிப்பு வகைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.


