in

32 அடி உயரமான விநாயகருக்கு மகா சங்கடஹர சதுர்த்தி

32 அடி உயரமான விநாயகருக்கு மகா சங்கடஹர சதுர்த்தி

 

ஆசியாவிலேயே ஒரே கல்லிலான 32 அடி உயரமான விநாயகருக்கு மகா சங்கடஹர சதுர்த்தி நாளான இன்று 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம், கோபால சமுத்திரக்கரையில் அமைந்துள்ள நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயிலில் ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயர ஸ்ரீ மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு, மகா சங்கடஹர சதுர்த்தி நாளான இன்று மாலை 6.00 மணி அளவில் பால், பன்னீர், திருநீர், மஞ்சள், சந்தனம், தேன், திருமஞ்சனம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 32 அடி விநாயகருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் 7 சாரா விளக்கும், 7 ஸர்ப விளக்குகளால் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த பூஜைக்கு பின் 7.00 மணியளவில், 108 பெண்கள் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை கொண்டு 1 அடி விளக்கினை ஏற்றி தங்க தேருடன் கோபால சமுத்திர குளத்தை சுற்றி வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

மேலும், இக்கோயிலில் அமைந்துள்ள 3 அடி உயர கொண்ட 108 விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

What do you think?

பாபநாசத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் சலங்கை நாதம் நடன நிகழ்ச்சி

கிளியனூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி ஆலய பிரம்மோற்சவ விழா