மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றுறது
மயிலாடுதுறையில் மாயூரநாதர் ஆலயத்தில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு இருபதாம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா கடந்த 12ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் சிவனின் அனைத்து முத்திரைகளையும் உள்ளடக்கிய நாட்டிய படைப்புகளை சென்னை ந்ருத்ய சம்சுருதி டிரஸ்ட் குரு வைதேகி ஹரிஷ் மாணவிகள் அரங்கேற்றினர்.இதேபோல் சேலத்தைச் சேர்ந்த குரு அனுராதா சுவாமிநாதனின் மாணவிகள் பழமையான நாட்டிய உருப்படிகளை தொகுத்து வழங்கினர்.
தொடர்ந்து அமெரிக்காவின் சுமன் நாயக் நடேசா ஸ்கூல் ஆஃப் பரதநாட்டியம்,மற்றும் பெங்களூரு,மும்பை மயிலாடுதுறையை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் நடனத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
பரதநாட்டியம் அரங்கேற்றிய குரு மற்றும் மாணவிகளுக்கு சம்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் சான்றிதழ்கள் கேடயங்கள் வழங்கப்பட்டன.


