மீனவர்களின் அனைத்து குறைகளும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் நிவர்த்தி செய்யப்படும் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
தமிழகத்தில் கன்னியாகுமரி வரை உள்ள மீனவர்களின் அனைத்து குறைகளும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் நிவர்த்தி செய்யப்படும் நாகப்பட்டினம் நம்பியார் நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை நாகை அடுத்த நம்பியார் நகர் மீன்பிடித் துறைமுகத்திற்கு நேரடியாக வருகை தந்து பார்வையிட்டார்.
அப்போது அங்குத் திரண்டு இருந்த மீனவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர் அப்போது மீனவர்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் அரசின் பங்களிப்பாக 24 கோடியும் மக்களின் பங்களிப்பாக 12 கோடி என 36 கோடி ரூபாயில் சிறு துறைமுகம் வைக்கப்பட்டது.
பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் தற்போதைய முதல்வர் பயன்பாட்டிற்கு துறைமுகத்தை திறந்து வைத்துள்ளார் இங்கு பல்வேறு குறைபாடுகள் உள்ளது.
அதிமுக ஆட்சி அமைந்த உடன் இந்த சிறு துறைமுகத்தில் உள்ள பிரச்சனைகள் பாதிப்புகள் சரி செய்யப்பட்டு படகுகள் பாதுகாப்பாக வந்து செல்ல வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் நம்பியார் நகர் பகுதியில் சாலை வசதி மோசமாக உள்ளதாக கூறி உள்ளீர்கள் அதுவும் சரி செய்து தரப்படும் வழங்கப்படும் தமிழகத்தில் கன்னியாகுமரி வரை உள்ள மீனவர்கள் தடுப்புச் சுவர் சிறு துறைமுகங்கள் மீன் இறங்குதளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
அதேபோல் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள் அதுவும் அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்த்தி வழங்கப்படும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மானியத்தில் பைபர் படகுகள் வழங்கப்பட்டது.

அதேபோல் 6 ஆயிரம் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டு 1300 வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தற்போது பணிகள் முடிந்தும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறுகிறார்கள்.
மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்ற அதிமுக ஆட்சி அமைந்த உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்


