திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்காக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை புறக்கணித்த திமுக மாமன்ற உறுப்பினர்கள்
மாமன்ற கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பங்கேற்காத காரணத்தால் 46 தீர்மானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மாமன்ற கூட்டத்தில் தற்போது விவாதம் மட்டுமே நடைபெற்ற வருகிறது
மதுரை மாநகராட்சி மாமன்றத்தின் 39 ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
100 மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க கூடிய நிலையில் தற்போது 23 மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று உள்ளனர்
பெரும்பான்மையான உள்ள திமுக மாமன்ற உறுப்பினர்களில் மிக மிக குறைந்த அளவில் உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர்
மதுரை உத்தங்குடியில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் வருவதால் மாமன்ற உறுப்பினர்கள் அங்கே சென்று விட்டார்கள்
பெரும்பான்மையான மாமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் காலி இருக்கைகளோடு நடைபெறும் மாமன்ற கூட்டம்
பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் இல்லாதபோது 46 தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது. என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு
அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் எதிர்ப்பையடுத்து தீர்மானம் நிறைவேற்றாமல் மக்கள் பிரச்சனை தொடர்பான விவாதம் மட்டுமே நடைபெறுகிறது


