in

மதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி விற்பனை தொடங்கியது

மதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி விற்பனை தொடங்கியது

 

மதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி விற்பனை தொடங்கியது – ஆர்வமுடன் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்கிசெல்லும் பொதுமக்கள் – காவல்துறை உதவி மையம் திறப்பு – கண்காணிப்பு தீவிரம்

கரூர் சம்பவத்தை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலின்று பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல காவல்துறை தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம் – மாநகர காவல் ஆணையர் பேட்டி.

தீபாவளி முன்தினம் இரவான 19 ஆம்தேதி இரவு முழுவதும் கடைகள் செயல்படுவதற்கு தடை இல்லை – பொதுமக்கள் பொருட்கள் வாங்கிகொள்ளலாம்- மாநக காவல் ஆணையர்.

தீபாவளி பண்டிகையை நெருங்கிய நிலையில் மதுரையின் முக்கிய பஜார் பகுதியான விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, பத்து தூண், கீழவாசல் ஆகிய பகுதிகளில் தீபாவளி ஜவுளி விற்பனை தொடங்கியது.

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு தேவையான ஜவுளி பொருட்களை வாங்குவதற்கு வருகைதர தொடங்கினர்.

பொதுமக்கள் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர காவல் துறை சார்பில் விளக்குத்தூண் பகுதியில் காவல் உதவி மையத்தை காவல் ஆணையர்  லோகநாதன் திறந்துவைத்தார்.

பஜார் பகுதி முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலமாக பொதுமக்களின் நடமாட்டம் முழுவதுமாக கண்காணிக்கும் பணி்யை பார்வையிட்டார்.

பின்னர் கண்காணிப்பு கோபுரம் அமைப்பது மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினரிடம் ஆலோசனை நடத்தினார்.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வாகனங்களையும் முறையான இடங்களில் நிறுத்த வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநகர காவல் ஆணையர் லோகநாதன்.

தீபாவளியை முன்னிட்டு 15ஆம் தேதி முதல் அதிகளவிற்கான கூட்டம் வரும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரபடுத்தியுள்ளோம்.

தீபாவளிக்கு முந்தைய சனி ஞாயிறு ஆகிய நாட்களில் அதிக அளவிற்கான கூட்டம் வரும் அதற்கு ஏற்பட பைக் மற்றும் கார் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

6 இடங்களில் 1,800 கார்களின் நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மாசி வீதி மற்றும் மாரட் வீதிகளில் பைக் பார்க்கிங் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 16 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன அதே போன்று ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்கள் கடைகள் மற்றும் வீதிகள் முழுவதிலும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது.

19 ஆம் தேதி இரவு பொருட்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் எந்தவித தடையும் இல்லை என தெரிவித்தார்.

 

கரூர் சம்பவத்தை கருத்தில் கொண்டு முழுவதுமாக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு ட்ரோன் மூலமாக கூட்டம் குறித்து கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேலும் தீபாவளிக்கு முந்தைய இரவு குற்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க காவல்துறையின் சோசியல் மீடியா மூலமாக வரும் புகார்களின் அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் 63 இரு சக்கர மற்றும் 21 நான்கு சக்கர வாகனங்கள் மூலமாகவும் 2  QRD வாகனங்கள் மூலமாக கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும், தொடர்ந்து கூட்டத்தை கண்காணிப்பதற்கு சிசிடிவி, ட்ரோன் மூலமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

சரித்திர குற்ற பதிவேடுகளில் உள்ள குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படும் எனவும்தெரிவித்தார்.

What do you think?

பாம்பன் சாலை பாலத்திலிருந்து கடலில் குதிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

சாய் பாபா கோவிலில் குரு வார சிறப்பு வழிபாடு