in

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மார்கழி மாதம் பௌர்ணமி திருவிளக்கு பூஜை 108 பெண்கள் பங்கேற்று

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மார்கழி மாதம் பௌர்ணமி திருவிளக்கு பூஜை 108 பெண்கள் பங்கேற்று

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருகோயிலில் மார்கழி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருகோயில் வளாகத்தில் திரு விளக்கு பூஜை நிகழ்ச்சி
நடைபெற்றது.

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.

மேலும் உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர் மாலை 6 மணியளவில் உற்சவ அம்மனுக்கு பம்பை மேளதாளம் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 108 பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து விளக்கு பூஜையில் ஈடுபட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்
இதனை தொடர்ந்து அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

What do you think?

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் : எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக்

திண்டுக்கல்லில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை