வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத் திருமாளிகையில், திருஅறை தரிசனம்
கடலூர் மாவட்டம் வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத் திருமாளிகையில், திருஅறை தரிசனம் நடைபெற்றது.வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், ஆண்டு தோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா விமர்சையாக கொண்டாடப்படும்.
இதேபோல் இந்த ஆண்டு, 155-வது தைப்பூச ஜோதி தரிசன விழா, 1-ஆம் தேதி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாக திருமாளிகையில், திருஅறை தரிசனம் இன்று நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, காலை, 7:00 மணிக்கு, வடலூர் தரும சாலையில் இருந்து, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி அலங்கரிக்கப்பட்டு, பல்லக்கில் வைத்து சன்மார்க அன்பர்கள் சுமந்தபடி, பக்தர்கள் வள்ளலார் நடந்து சென்ற பாதை வழியாக, மேட்டுக்குப்பம், சித்தி வளாக திருமாளிகைக்கு ஊர்வலமாக சென்றனர்.
பல்லக்கு மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் திருமாளிகையில், வள்ளலார் இறைவனுடன் ஜோதியாக கலந்த அறை முன் வைத்து, மதியம் 12:30 மணிக்கு திருஅறை திறக்கப்பட்டது.
இதை காண ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர்.இந்த தரிசனம் மாலை 6:00 மணிவரை தரிசனம் நடைபெறும்.இதில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிங்களில் இருந்தும் சன்மார்க்க பக்தர்கள் கலந்து கொண்டு திருஅறை தரிசனம் செய்தனர்.


