கார்த்திகை தீபத்திருவிழா இரண்டாம் நாள் தெப்பல் உற்ச்சவம்
கார்த்திகை தீபத்திருவிழா இரண்டாம் நாள் தெப்பல் உற்ச்சவத்ததில் பராசக்தியம்மன் தெப்பலில் பவனி……
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தெடங்கி கடந்த 10 நாட்களும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபம் ஏற்றபட்டது.
இததனை தொடர்ந்து அக்னி பிழம்பாக காட்சி தந்த அண்ணாமலையாரை ஆற்றுப்படுத்தும் விதமாக அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருள மூன்று முறை அய்யங்குளத்ததில் சுற்றி வந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நாளை மூன்றாம் நாள் இரவு வள்ளி தெய்வானையுடன்
சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பல் உற்சவம் நடைபெறும்.


