in

ஊத்துக்காடு புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் ஆண்டு திருவிழா

ஊத்துக்காடு புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் ஆண்டு திருவிழா

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு பகுதியில் அமைந்துள்ள புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் 10 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 0.6.09. 2025 சனிக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு திருக்கொடியானது ஆலயத்தில் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. அதன் மறுநாள் 07. 09. 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை திருப்பலி பூசை நடைபெற்றது.

அதன் மறுநாள் திங்கட்கிழமை 08.09. 2025 அன்று மாலை 8 மணிக்கு திருத்தேர் ஊர்வலமானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த திருத்தேர் ஊர்வலமானது ஊத்துக்காடு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தது அதன் பின்பு திருத்தேர் ஆலயத்துக்கு வந்தவுடன் திருக்கொடையானது இறக்கப்பட்டது. இதில் 300 பெயர் கலைந்து கொண்டு மாதா அருளை பெற்றனர்.

What do you think?

சிதம்பரத்தில் இயற்கை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சீக்கிய போதனைகள் மூலம் தமிழ்நாட்டில் சாதி வன்கொடுமைகளை ஒழிக்கலாம்