கிராம தேவதை மூங்கிலம்மன் ஆலய 24 ஆம் ஆண்டு ஆடிபுர ஊஞ்சல் உற்சவம்
திண்டிவனம் கிராம தேவதை மூங்கிலம்மன் ஆலய 24 ஆம் ஆண்டு ஆடிபுர ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகர கிராம தேவதை சேத்துக்கால் செல்லியம்மன் என்கின்ற மூங்கிலம்மன் ஆலயத்தில் 24 ஆம் ஆண்டு ஆடிபுரத்தை ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் ஸ்ரீ மூங்கில் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாராணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து மூங்கில் அம்மன் அம்மன் உட்பிரகாரம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்


