மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தன்னார்வலர்
நாகை அருகே சுடுகாட்டில் வசித்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு முடி திருத்தம் செய்து புத்தாடை அணிவித்து காப்பகத்தில் ஒப்படைத்த தன்னார்வலருக்கு குவியும் பாராட்டுக்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வட மாநில இளைஞர் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்து அவ்வப்போது அங்கே உள்ள குப்பைத்தொட்டியில் கிடக்கும் உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார்.
இதை கண்ட அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் உள்ள பாரதிமோகன் அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி அந்த இளைஞரை குப்பைத்தொட்டி பகுதியில் நின்ற அவரை அழைத்து முடி திருத்தம் செய்து புத்தாடை அணிவித்து கீழையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அங்கிருந்து காவல்துறையின் அனுமதியோடு கும்பகோணத்தில் உள்ள மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

நீண்ட நாட்களாக குப்பைத்தொட்டியில் கிடந்த உணவை சாப்பிட்டு வந்த ஒரிசா மாநில இளைஞரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தன்னார்வலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.


