in

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 ஆம் ஆண்டு கந்தூரி விழா

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 ஆம் ஆண்டு கந்தூரி விழா

 

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது: கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் செய்யது அப்துல் காதிர் நாயகம் தர்காவின் 469 ஆம் ஆண்டு கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இதனை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி தர்காவின் ஐந்து மினாராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், நாகையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு மற்றும் கப்பல் ரதம், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடி உள்ளிட்ட அலங்கார வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் ஆண்டவர் தர்கா வந்து அடைந்தது. ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து வந்த பக்கீர்மார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடியினை வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து கொட்டும் மழையிலும் கொடிக்கு தூ-வா ஓதப்பட்டு வாணவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து வண்ணமயமான வான வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.

விழாவை காண தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் இந்துகள் கலந்து கொண்டு நாகூர் ஆண்டவரை பிராத்தனை செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 30ம் தேதி இரவு தாபூத்து என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் இருந்து புறப்பட்டு, டிசம்பர் 1ம் தேதி அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு தர்காவில் நடைபெற உள்ளது.

விழாவையொட்டி நாகை திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What do you think?

சினிமா வாய்ப்பு மோசடி! RKFI-இன் அதிரடி எச்சரிக்கை: சட்ட நடவடிக்கை உறுதி!

வீட்டில் 22 பவுன் திருட்டு, லாக்கரோடு எடுத்து சென்ற நூதன திருடர்கள்