in

ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ள தளபதி முருகன் வேட்பு மனுவை தாக்கல்


Watch – YouTube Click

ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ள தளபதி முருகன் வேட்பு மனுவை தாக்கல்

 

ரஜினிகாந்த் படத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவேன். தேர்தல் செலவிற்கு காசு பணம் தர வேண்டாம் தலைவர் என்னை ஆசீர்வாதம் செய்தால் போதும். நான் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று விடுவேன்.

தலைவர் இந்தத் தேர்தலில் எந்த கட்சிக்கும் வாய் திறக்காமல் இருந்தால் போதும் எனது வெற்றி உறுதி. 40 ஆண்டுகள் ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறேன்.

தலைவர் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என கூறிய நிலையில் வராததால் என்னைப் போல ஒரு சிலர் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடுகிறோம். தற்போது எடுத்து வரக்கூடிய படத்தின் சூட்டிங்கிற்கு திருநெல்வேலி மாவட்டம் வரும்போது அவர் முகத்தை காட்டினாலே போதும் எனது வெற்றி உறுதியாகி விடும்.

இவ்வாறு கூறியிருப்பவர் ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளராக பதவி அளித்து வரும் திருநெல்வேலி சிந்து பூந்துறையைச் சேர்ந்த தளபதி முருகன் இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு அவர் கூறிய வார்த்தைகள் தான் இவை.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு புதுவை உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு வரும் 19ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் இன்று ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ள தளபதி முருகன் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார்.

ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி ரசிகராக உள்ளோம் பல்வேறு உதவிகளை ரசிகர் மன்றம் மூலமாக செய்து வருகிறோம் சமீபத்தில் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளோம் எனக் கூறிய அவர் தொடர்ந்து பேசுகையில்.

தலைவர் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிய நிலையில் அவர் வராததால் என்னை போல் ஒரு சிலர் தற்போது வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம்.தலைவர் தேர்தல் செலவுக்கு காசு பணம் எதுவும் தர வேண்டாம் அவரது ஆசீர்வாதம் மட்டுமே எனக்கு வேண்டும் தலைவரின் அன்புக்காகவே பல ஆண்டுகள் அவரது இயக்கத்தில் இருந்து உழைத்து இருக்கிறோம்.

ரஜினிகாந்த் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் வாய் திறக்காமல் இருந்தாலே நான் வெற்றி பெற்று விடுவேன் ஆனால் வென்றால் எந்த கட்சிக்கு செல்வேன் என என்னால் இப்போது கூற முடியாது தற்போது எடுக்கப்பட்டு வரும் படத்தின் சூட்டிங் நடக்கும் போது திருநெல்வேலியில் என் முகத்தை பார்த்தாலே போதும் வெற்றி நிச்சயம் ஆகிவிடும் ரஜினிகாந்த் படத்துடனே வாக்கு சேகரிக்க களம் இறங்குவேன் என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு

கீழ்பாலூரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி